படத்தில் நான்கைந்து அப்பாக்களும் , ஐந்தாறு பிள்ளைகளும் படம் முழுக்க பங்கெடுத்து வந்தாலும் சமுத்திரகனி தான் மெயின் அப்பா . யெஸ் ., தன் மகனின் திறமை அறிந்து அவன் விருப்பத்திற்கேற்ப அவனை வளர்க்க வேண்டுமென்பது அப்பா சமுத்திரகனியின் விருப்பம் ., இவர் இப்படியென்றால் இவரது நண்பர் தம்பி ராமைய்யாவோ ., நன்றாகவே படிக்கும் தன் மகனை படி, படி எனப்படுத்தி., மேல்நிலை படிப்பிற்கு போர்டிங் ஸ்கூலில் போட்டு நண்பர்களிடமிருந்து பிரித்து ., மகனை டாக்டராக்கி அமெரிக்கா சிட்டிசன் ஆக்க வேண்டுமென்பதை லட்சியமாக கொண்டிருக்கிறார். சமுத்திரகனியின் லட்சியம் தம்பி ராமைய்யாவின் ஆசை.
DOWNLOAD
இரண்டிலிருந்தும் வேறுபடுகிறது .... இவர்கள் இருவருக்கும் நண்பரான நமோ நாராயணனின் மகன் பற்றிய கனவு. ஆம் , இருக்கும் இடம் தெரியாமல் நமக்கேன் வம்பென தன் மகனை வளர்த்து ஆளக்க ஆசைபடுகிறார்.... நமோ . இந்த மூன்று ஆண் மாணவர்களும், கூடவே அவர்களிடம் அப்பா சமுத்தி ரகனியின் அட்வைஸ் படி நல் நட்பு பாராட்டும்அவர்களது இரு பள்ளித் தோழிகளும் ... படிப்பிலும் , விளையாட்டிலும் .... தங்கள் கனவுஅப்பா சமுத்திரகனியால் செய்யும் சாதனைகளையும் , தங்கள் சோதனைகளையும் ., கூடவே சந்தேகங்களையும்.,
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
ஒற்றை அப்பாவாக நின்று சமுத்திரகனி தீர்த்து வைத்து அவர்களை சாதிக்க வைப்பதுடன் ., சமூகத்திற்கு கல்வி விஷயத்தில் தன்னால் முடிந்த சீர்திருத்தத்தையும் நண்கு உறைக்கிற மாதிரி சொல்லி ., நாமும் நம் பிள்ளைகளுக்கும் அவர்களின் நண்பர்களுக்கும் இப்படி ஒரு அப்பாவாக இருக்க வேண்டும் என உறுதி ஏற்கவும் வைத்திருக்கும் படம் தான் 'அப்பா' திரைப்படம்
காட்சிப்படுத்தல்: நாடோடிகள் பட நிறுவனமும் ., எட்ஸட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து வழங்க ., பி.சமுத்திரகனியின் எழுத்து , இயக்கம் , நடிப்பு மற்றும் தயாரிப்பில்., ,"உங்கள் வழியாக இந்த உலகிற்கு வந்த புனித ஆத்மாக்களை வளர்க்காதீர்கள் , உயர்த்துங்கள்.... ", "பிள்ளைகளின் எதிர்காலாம் அவர்கள் படிக்கும் பள்ளியில் இல்லை ... பெற்றோரின் கையில்தான் இருக்கிறது ... " என்பது உள்ளிட்ட இன்னும் பல மெஸேஜூடன் கூடிய தற்போதைய சமூகத்திற்கு தேவையான தரமான காட்சிகளை பாடம் மாதிரி பக்காவாக படமாக்கியிருக்கும் விதத்தில் ஜெயித்திருக்கிறது இந்த "அப்பா ".
கதாநாயகர்: நேர்மையான நல்ல அப்பாவாக, தயாளன் பாத்திரத்தில் சமுத்திரகனி... சரியாக நடித்திருக்கிறார். மனைவியின் பந்தா விஷயங்களுக்கு காது கொடுக்காமல் அவரை சில காலம் பிரிந்து பிள்ளை வளர்ந்ததும் அவரையே விரும்பி வந்து சேர வைக்கும் இடத்தில்தொடங்கி., மகனின் நீச்சல் ஆர்வத்தை சரியாக கண்டுபிடித்து அவனை கின்னஸ் சாதனை புரியும் வீரனாக்குவது வரை ... எல்லாமும் சமுத்திரகனிக்கு ஈஸியாக வசப்படுகிறது.
அதே மாதிரி .,தனியார் பள்ளி வேனில் அடைத்து போகும் மாணவர்களைப் பார்த்து கவர்மென்ட் ஸ்கூல் சைக்கிள் சவாரிமகன் ., எங்கள் பள்ளிக்குவேன் கிடையாதாப்பா ? எனக் கேட்க ., நீ , நாட்டுக் கோழி சுதந்திரமாக சுற்றி வருகிறாய் .அவர்கள் எல்லாம்
பிராய்லர் கோழி கள் அதான் அடைச்சு வேனில் அழைத்து போகின்றனர் என்று நக்கலடிப்பதிலாகட்டும் ., பத்து வயது கூட நிரம்பாத மகனை பொது பேருந்தில் தனியாக ஏற்றி விட்டு ., அவனை இறங்க சொன்ன இடத்தில் காணாது தவிக்கும் தவிப்பில் ஆகட்டும் சமுத்திரகனி ., நடிப்பில முத்திரை பதித்திருக்கிறார்!சபாஷ்!
பிற நட்சத்திரங்கள்: மகன் மீது தன ,கனவு , லட்சியம் எல்லாவற்றையும்
திணித்து ., நன்றாக படித்து முதல் மாணவன் என பெயரெடுத்தாலும் போதாது ... எப்படி ஒரு மார்க் குறையலாம் என போட்டு அடிக்கும் போறாத தகப்பனாக தம்பி ராமைய்யா .,இறுதியில் ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்த மகனின் நிலையறிந்து , நிலை குலைந்து போகுமிடங்களில் அப்பப்பா .. அவரது நடிப்பு சில இடங்களில் கூடுதலாக தெரிந்தாலும் தம்பி ராமைய்யா என்பதால் அது சகஜமாக இருக்கிறது பேஷ் , பேஷ்!
நமக்கு எதுக்கு வம்பு என ., .இருக்கிற இடம் தெரியாமல் வாழ்ந்துட்டு போயிடணும் ., நமக்கேன் வம்பு ... என சொல்லி சொல்லியே., தன் பிள்ளையை உயரம் குறைவாக வளர்த்திடும் நமோ நாராயணன்.ஆனால், அப்பனின் பேச்சையும் தாண்டி ., தன் நண்பனின் அப்பாசமுத்திரகனியால் , "மனிதனை ,நாய் பாதுகாத்தால் அது கிராமம். .நாயை , மனிதன் பாதுகாத்தல் அது நகரம்... என்பது உள்ளிட்ட தன் கவிதைகள் மூலம் சாதனை உயரம் மிகவும்சிறுவனாக படம் முழுக்க நஷாத் தொடுவது சகாப்த்தம்.. நண்பர்களுக்கு நஷாத் 'மொக்க' ஐடியாக்களும் கச்சிதம் . இவர் மாதிரியே .,
சமுத்திரகனியின் மகனாக வரும் 'காக்கா முட்டை' விக்னேஷ் ., அப்பவுக்கு ஏத்த பிள்ளையாக டீன் ஏஜ் வயது கோளாறை அழகாக பதிவு செய்துள்ள ராகவ் , யுவல்ட்சுமி, இட்லி கடைபாயின் மகளாக வரும் படிப்பு மீது அதீத அக்கறையுடன் கேபிரில்லா உள்ளிட்ட பள்ளி மாணவ மாணவியர் எல்லோரும் கனகச்சிதம். சமுத்திரகனியின் பிடிவாத மனைவியாக பிரீத்தி ., பநதா புருஷணின் பந்தா பிடித்தும் , பிடிக்காமலும் பந்தா பாதி மகன் மீதான பாசம் பாதி என வாழும் வினோதினி உள்ளிட்ட இரு பெண்கள் கேரக்டர் கூட பக்கா .
தொழில்நுட்பகலைஞர்கள்: இசை ஞானி இளையராஜாவின் உயிரில் ஊடுறுவும் உணர்வுபூர்வ இசை , இப்படத்திற்கு சேர்க்கும் ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு ,ஏ.எல். ரமேஷின் பக்கா படத்தொகுப்பு உள்ளிட்டவை.. சமுத்திரகனியின் இயக்கத்திற்கு கூடுதல் ப்ளஸ்.
பலம்: சமுத்திரகனியின் எழுத்து , இயக்கத்தில் சகமாணவி மீதான பால் ஈர்ப்பை தோளுக்கு உயர்ந்த பிள்ளைக்கு புரிய வைக்கும் விதம்.... "அடுத்தவங்களை நம்ப வைக்க நம்மை நாமே சில நேரங்களில் காயப்படுத்த வேண்டியிருக்கிறது", "எதையெல்லாம் அப்பாட்ட வந்து சொல்ல முடியுமோ அதெல்லாம் செய் . சொல்ல முடியாததைசெய்யாதே.... " என மகனுக்கு தந்தை கூறும் 'பன்ச்' 'அறிவுரைகள் மற்றும் 'மாமா பணம் , காசெல்லாம் வச்ச புள்ளைங்களை தரமா வளர்க்க முடியாது .....' எனும் தத்துவம் .,அம்மா எங்கிட்டாவது பதுங்கி கிடக்கும் பொறந்த வீட்டுல அதிகாரம் பண்றதெல்லாம் புருஷன் வீட்ல கவுரமா வாழற வரைக்கும் தான் .... எனும் பெண்களுக்கான புத்திமதி ., 'விவசாய நாடாகிய நம்ம நாட்டுல காப்பாற்றபட வேண்டிய கட்டாயத்தில் இருப்பது விவசாயம்தான்...' , எனும் யோசிக்க வைக்கும் வசனம்,' உள்ளிட்ட எல்லாமும் படத்திற்கு மேலும் , மேலும் பலம் சேர்க்கின்றன.
பலவீனம்: க்ளைமாக்ஸில் வந்து லக்சர் கொடுக்கும் சசிக்குமார் கடுப்பேற்றுவது பலவீனம்.
இயக்கம்: பி.சமுத்திர சுனியின் இயக்கத்தில் நிறைய மனதை உலுக்கும் காட்சிகள் ., நெஞ்சம் நிறைக்கும் வசனங்கள் ... இவற்றுடன் இன்றைய காசு பறிக்கும் கல்வி முறை பற்றியும் பிள்ளை கள் வளர்ப்பு பற்றியும் பிரமாதமாக பேசியிருக்கிறது 'அப்பா திரைப்படம்'. அதே நேரம், க்ளைமாக்ஸை முன்கூட்டியே யூகிக்க முடியும் பலவீனம்.... உள்ளிட்ட சில குறைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால்.,சீர்திருத்த கருத்துக்களுக்காகவே சமுத்திரகனியின் ''அப்பா' - நம் சமுதாயத்திற்கு தேவையான செம படம் ,
Post a Comment