அர்ஜுன்(அஜித் குமார்) மற்றும் கயல்(த்ரிஷா கிருஷ்ணன்) சந்தித்த மூன்று மாதங்களிலேயே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். திருமணமாகி 12 ஆண்டுகளாகிவிடுகிறது. கயலுக்கு கருகலைந்துவிடுகிறது. அர்ஜுனும், கயலும் சந்தோஷமாக இல்லை. தனக்கு இன்னொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி விவாகரத்து கேட்கிறார் கயல். ஆனால் நம் திருமண பந்தம் சரி செய்ய முடியாத அளவுக்கு மோசமாகிவிடவில்லை என்கிறார் அர்ஜுன்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
விவாகரத்து வேலை முடியும் வரை டிப்லிசியில் இருக்கும் தன் பெற்றோரின் வீட்டில் தங்க முடிவு செய்கிறார் கயல். நானே உன்னை காரில் டிராப் செய்கிறேன் என்கிறார் அர்ஜுன். அஜர்பைஜானில் இருக்கும் பாகுவில் இருந்து டிப்லிசிக்கு காரில் கிளம்புகிறார்கள். 10 மணிநேர டிரைவின்போது கயலுடன் சீரியஸாக பேசிக் கொண்டிருக்கும்போது வேறு ஒரு வாகனத்தின் மீது அர்ஜுனின் கார் மோதப் பார்க்கிறது. அந்த காரில் இருந்தவர்கள் அர்ஜுனை எச்சரிக்கிறார்கள்.
DOWNLOAD
பெட்ரோல் போட காரை நிறுத்தியபோது தமிழர்களான ரக்ஷித் (அர்ஜுன்), அவரின் மனைவி தீபிகா(ரெஜினா கசான்ட்ரா) ஆகியோரை சந்திக்கிறார் கயல். அர்ஜுனின் கார் பிரச்சனை கொடுக்கவே கயலை அருகில் உள்ள கஃபேவில் இறக்கிவிடுமாறு ரக்ஷித், தீபிகாவுடன் அனுப்பி வைக்கிறார் அர்ஜுன். அவர் அந்த கஃபேவுக்கு சென்றபோது தான் கயல் கடத்தப்பட்டது அர்ஜுனுக்கு தெரிகிறது. கயலை காப்பாற்றுவாரா இல்லை இழந்துவிடுவாரா என்பதே கதை.
படம் துவங்கியதும் மெதுவாக செல்கிறது. சவதீகா பாடல் ஆரம்பத்திலேயே வந்து ரசிகர்களை ஆட வைக்கிறது. கணவன், மனைவி இடையேயான பிரச்சனை, பிளாஷ்பேக், கயல் கடத்தப்படுவதற்கு முந்தைய காட்சிகள் மெதுவாகவும், சுவராஸ்யம் இல்லாமலும் உள்ளது. இடைவேளையின்போது தான் சுவாரஸ்யம் தொத்துகிறது. அர்ஜுன் மற்றும் ரெஜினாவின் பின்னணியை காட்ட அந்த சுவாரஸ்யமும் போய்விடுகிறது.
அர்ஜுன், ரெஜினா பற்றிய காட்சியை கடைசியில் காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் இடைவேளையின்போது காட்டி இரண்டாம் பாதியின் சுவாரஸ்யத்திற்கும் வேட்டு வைக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் கடைசி ஒரு மணிநேரம் பரபரவென்று செல்கிறது படம். ஆனால் கிளைமாக்ஸ் காட்சி திருப்திகரமாக இல்லை.
இது வழக்கமான மாஸ் மசாலா படம் கிடையாது. அஜித் குமாருக்கு ஒரு அறிமுக பாடல், மாஸ் வசனங்கள் எல்லாம் இல்லை. மாஸ் காட்சிகளை எதிர்பார்த்து வரும் அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தை அளிக்கலாம். அவ்வளவு சீக்கிரம் சண்டைக்கு போக மாட்டேன் என்கிறார் அஜித். அவர் பிறரை அடிப்பதை விட அடி வாங்குவது அதிகமாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகள் சுமார் ரகம் தான்.
கயல் ஏன் தன்னை விவாகரத்து செய்கிறார் என்பது தெரியாமல் தவிக்கும் நபராக தவிக்கிறார் அஜித். அர்ஜுனாகவே வாழ்ந்திருக்கிறார் அஜித். முதல் பாதியில் த்ரிஷாவுக்கு ஸ்பேஸ் அதிகம். இரண்டாம் பாதியில் அவருக்கு பெரிதாக வேலை இல்லை. அர்ஜுன் மற்றும் ரெஜினா கசான்ட்ரா சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் அஜர்பைஜானை அழகாக காட்டியிருக்கிறார். அனிருத்தின் இசை சிறப்பு. ஆனால் கடைசி சில நிமிடங்களில் தான் அனிருத் தன் மொத்த திறமையையும் காட்டியிருக்கிறார். சவதீகா பாடல் மட்டுமே மனதில் நிற்கிறது.
Post a Comment