குணசேகரனைக் கொண்டு வருவதற்காக ஒரு பக்கம், ஒரு தேர்ந்த கிரிமினலை வில்லன் அனுப்புகிறான். இன்னொரு பக்கம், தன் மகனை மீட்பதற்காக ராணுவத்தில் பணிபுரிந்த அனுபவமுள்ள மேஜரின் உதவியைத் தாய் கோருகிறார். தேர்ந்த கிரிமினலான பிரதாப் என்கிற பாத்திரத்தில் ராம்கி. நல்ல நோக்கத்துடன் கிளம்பும் மேஜர் டேவிட்குமார் என்கிற பாத்திரத்தில் அருண்பாண்டியன். இருவரில் வெற்றி பெற்றது யார் என்பதைப் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடனும் கமர்ஷியல் அம்சங்களுடனும் சுவாரஸ்யமாகச் சொல்கிறது, ‘இணைந்த கைகள்’.
Post a Comment