இந்தியா முழுக்க சாதி, மதங்களில் நடக்கும் ஆணவக்கொலையை வைத்து ஏற்கனவே ஏராளமான படங்கள் வந்து விட்டன, சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
DOWNLOAD
இவை நிற்காது. இன்னும் சில தலைமுறைகள் சென்றால் மாறலாம். காரணம், தற்போது சமூகத்தளங்களும், திரைப்படங்களும் வளர்த்து வருகின்றன.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
இவ்வாறு நடந்த ஒரு சம்பவத்தை வைத்து மர்டர் எடுக்கப்பட்டுள்ளது.
பாசமிகு அப்பாவாக நடித்தவர் ஆகச்சிறந்த நடிப்பு. துவக்கத்திலிருந்து இறுதி வரை அபாரமாக நடித்துள்ளார் குறிப்பாக அவரது Transformation.
தான் அளவு கடந்த அன்பு வைத்த மகள் புதிதாக வந்த ஒருவனுக்காகத் தன்னையே ஒதுக்கும் போது உடைந்து விடுகிறார்.
எதிர்பாராத நிகழ்வை அவரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
பெண்ணின் அம்மா நன்றாக நடித்துள்ளார். ஒரு சராசரி அம்மாவாக, மனைவியாக அவரது பரிதவிப்பை அழகாக பிரதிபலித்துள்ளார்.
வர்மா படத்துக்கே உரிய ஒளிப்பதிவு கோணங்கள். செலவு என்று எதுவுமே இல்லை. பெரும்பாலான படத்தை ஒரு வீட்டுக்குள்ளேயே முடித்து விட்டார்கள்.
ஆனால், சலிப்பை ஏற்படுத்தாத அளவுக்கு உள்ளது.
பலரும் இப்படத்தைக் கடுமையாக விமர்சித்து உள்ளார்கள். ஆணவக்கொலையை ஆதரிப்பது போல உள்ளது என்பது உட்படப் பல குற்றச்சாட்டுகள்.
அவர் செய்தது தவறு என்றாலும், இறுதியில் தன் மகளுக்காகவே அனைத்தையும் செய்ததாக முடிக்கப்படுகிறது.
அந்தப்பையனை கொன்றால், மகள் தன்னிடமே வந்து விடுவாள் என்பது லாஜிக்கே இல்லையென்றாலும் செய்கிறார்.
இது தான் நடக்கும் என்று தெரிந்த படம், இருப்பினும் பெண்ணின் அப்பா கதாபாத்திரத்தின் நடிப்பு கவர்ந்தது.
என் அக்காக்களுக்கு அப்பா கட்டுப்பாடான சுதந்திரம் கொடுத்தார். அந்தச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை அனைவரையும் உணரச்செய்து இருந்தார்.
ஒரே பையன் என்பதற்காக எனக்கு எந்தக் கூடுதல் உரிமையோ, சுதந்திரமோ கொடுத்ததில்லை, அனைவரையும் ஒரே மாதிரி தான் பெற்றோர் வளர்த்தார்கள்.
இதையே என் பசங்க கிட்ட பின்பற்றுகிறேன் ஆனால், என் பெற்றோர் போல வளர்க்க முடியுமா? என்ற பயம் இருந்து கொண்டே உள்ளது.
அக்காலத்தில் இருந்தே என்றாலும் தற்போது அப்பாக்கள் மகளை வரம்புக்கு மீறிக் கொண்டாடுவது, செல்லம், கட்டுப்பாடற்ற சுதந்திரம் கொடுப்பது என்றுள்ளார்கள்.
ஊருல இவங்க தான் மகளைப் பெற்றது போல அலப்பறை.
அம்மாவை இப்பெண்கள் (ஒப்பீட்டளவில்) மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நீயா நானாவில் ‘என்னை மதிப்பதே இல்லை, அவளுக்கு எல்லாமே அப்பா தான்‘ என்று ஒரு பெண் விரக்தியாகக் கூறினார்.
இவ்வாறு அதிக செல்லம் கொடுத்து வளர்த்து, பின்னர் மேற்கூறிய முறையில் ஏதாவது நடந்தால், கொந்தளிக்க வேண்டியது.
பாசம் கொடுப்பது தவறில்லை ஆனால், அதையே Advantage ஆக எடுத்துக்கொண்டு, நாம் எது செய்தாலும், கேட்டாலும் செய்வார்கள், செய்ய வேண்டும் என்ற மனநிலைக்குப் மகளைக் கொண்டு செல்வது தவறு.
தற்போது பெரும்பாலான வீடுகளில் இது தான் நடக்கிறது. இதைக்கேட்டால் ‘மகளைப் பெற்ற அப்பாக்களுக்குத் தான் தெரியும்’ என்று வசனம் பேசுவார்கள்.
இவர்களே அதிகச் செல்லம் கொடுத்து லிட்டில் பிரின்சஸ் என்று வளர்த்து ஆளாக்கி, திருமணம் ஆன பிறகு குடும்பத்திற்குள் பெரிய சண்டையை உருவாக்கி விடுவார்கள்.
விமர்சனம் பெண் தொடர்பானது என்பதால் இதைக்குறிப்பிட்டேன். இதே போல வளர்க்கப்படும் பசங்க கதையை இன்னொரு கட்டுரையில் பகிர்கிறேன்.
தற்போது பலரும் பள்ளிக்கட்டணம், பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக ஒரு குழந்தையே பெற்றுக்கொள்கிறார்கள். இதன் காரணமாகவே கண்டபடி செல்லம் கொடுத்து நாசமாக்கி வருகிறார்கள்.
தன் பிள்ளையின் எதிர்காலத்தை நாசமாக்கியதில் தனக்கும் பங்குள்ளது என்பதையே பிள்ளைகள் பாதிக்கப்படும் போது தான் பெற்றோர்கள் உணர்கிறார்கள். சிலர் கடைசி வரை உணர்வதில்லை.
எல்லாம் முடிந்த பிறகு கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது?!
Post a Comment