‘தாழ்வுணர்ச்சி’ என்னும் விஷயத்தை எதற்காக இத்தனை விரிவாக வியாக்கியானப்படுத்த வேண்டியிருக்கிறது என்றால் `ஒரு தலை ராகத்தின்’ மையமே அதுதான்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
பணக்கார வீட்டு இளைஞனான ராஜா, மிக நல்லவன். அமைதியானவன். கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சக மாணவியான சுபத்ராவை கண்டதுமே அவனுக்குப் பிடித்து விடுகிறது. அவளுடைய அமைதியான சுபாவம் அவனை மேலும் கவர்கிறது.
DOWNLOAD
ராஜாவின் காதல் சுபத்ராவுக்குப் புரிந்தாலும் அவள் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. காரணம் அவளுடைய குடும்பத்தின் பின்னணி. அந்தக் குடும்பத்தின் தந்தை எப்போதோ வீட்டை விட்டு ஓடிப்போய் விடுகிறார். எனவே, அந்தக் குடும்பத்தின் தாய்தான் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தன் இரண்டு மகள்களையும் பராமரிக்க வேண்டியிருக்கிறது. தாயின் கற்பைப் பற்றி ஊரார் கொச்சைப்படுத்தி கேலி பேசுகிறார்கள். ‘நான்தான் இப்படியாயிட்டேன்... நீயாவது ஜாக்கிரதையா இரும்மா” என்று அடிக்கடி சொல்லி தன் மகள்களை ஜாக்கிரதையாக வளர்க்கிறார்.
ராஜா முன்மொழியும் மிக நாகரிகமான காதல் சமிக்ஞைகளை மிக கொடூரமான முறையில் சுபத்ரா நிராகரிப்பதற்கான காரணம் இதுதான். தன் காதலை எண்ணி எண்ணி ஏங்கி இறுதியில் செத்துப் போகிறான் ராஜா. ஒரு கட்டத்தில் தன் முடிவை மாற்றிக்கொண்டு காதலை தெரிவிப்பதற்காக சுபத்ரா ஓடோடி வரும்போது ராஜாவின் சடலத்தைத்தான் பார்க்க முடிகிறது.
Post a Comment