Peranbu Movie Review

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு, உணர்ச்சிகளை அடக்க முடியாமல் துடிக்கும் பருவம் எய்திய மகளுக்கும், அவளை தனியாக வைத்துக் கொண்டு தடுமாறும் தந்தைக்குமான பாசப் போராட்டமே "பேரன்பு" படத்தின் கரு.

DOWNLOAD

11 வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு ஊர் திரும்பும் கணவனை நேரில் சந்திக்கப் பிடிக்காமல் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகளை விட்டு விட்டு தாய்மையைமறந்து வேறொருவனுடன் ஓடிப்போகும் மனைவியை நொந்து கொள்ளாமல், தன்னை வெறுக்கும் மகள் மீது பாசத்தை பொழிந்து, அவளை வளர்க்க ஆள் தேடுவதாக தனக்கும் தக்கத் துணை தேடும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத தகப்பனும், தன் வயதுக்கே உரித்தான உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத மகளுமே "பேரன்பு" படத்தின் கதை, களம் எல்லாம்.

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 

"தங்க மீன்கள் " படத்தை இயக்கிய ராம் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் ஸ்ரீ ராஜ லஷ்மி பிலிம்ஸ் பேனரில் பி.எல்.தேனப்பன் தயாரித்திருக்கும் இப்படத்தில் மூளை முடக்குவாத பிள்ளைகளின் பிரச்சினையையும், அதற்கான தீர்வையும் மட்டும் அழகாக காட்சிப்படுத்தாமல் அவரது அப்பாவின் செக்ஸ் தேவைகளையும்., ஒடிப்போன அம்மாவையும் காட்சிப்படுத்தியிருக்கும் இடங்கள் முகச் சுழிப்பையே ஏற்படுத்துகின்றன .
"என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை தேர்ந்தெடுத்து இந்த கதையை சொல்றேன். அதைப் பார்த்தீங்கன்னா, நீங்க எவ்ளோ ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழறீங்கன்னு தெரியும்." அப்படின்னு என்ட்ரி ஆகுற மம்முட்டி, அத்தியாயம் 1 ,2 , 3 ன்னு தன் வாழ்க்கையில் அந்த மூளை வளர்ச்சி குன்றிய மகளால் நடந்த இன்ப துன்பங்களை நமக்கு காட்சிப்படுத்த ஆரம்பிக்கிறார். அவர் பங்கை அவர் சரியாக செய்திருக்கிறார் என்றாலும், இப்படி ஒரு அபத்தமான கதையில் அதுவும் அளவுக்கு அதிகமான வக்கிரமான கதையில் மம்முட்டி எப்படி நடிக்க சம்மதித்தார்? எனும் கேள்வியும் அடுத்தடுத்த காட்சிகளும் ரசிகனை படுத்த ஆரம்பிக்கின்றன.

மம்முட்டியின் மூளை முடக்குவாத மகளாக வரும் "தங்க மீன்கள் " சாதனா, தன் பங்கை கச்சிதமாக செய்திருக்கிறார்.
மம்முட்டி வீட்டுக்கு சாதனாவை பார்த்துக் கொள்ளும்வேலைக்கு வந்து அவர் வீட்டையே எழுதி வாங்கும் அஞ்சலி, மம்முட்டிக்கு உதவும் திருநங்கையாக வரும் அஞ்சலி அமீர், மருத்துவர் - சமுத்திரகனி, லிவிங்ஸ்டன், வடிவுக்கரசி, பாவல் நவகீதன்.... உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.

சூர்யா பரந்தாமனின் படத்தொகுப்பில் அவரது கரங்களை பலமாக இயக்குனர் ராம் கட்டிப்போட்டிருப்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் அந்த தனிமையான வீடு உள்ளிட்ட மொத்தப் படமும் கெத்தாக தெரிகிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பெரிதாக குறை இல்லை.

உலக திரைப்பட விழாக்களில் கடந்த ஓராண்டாக கலந்து கொண்டு திரைக்கு வந்துள்ள படம் என்பது பலம்.
மூளை முடக்குவாத பெண் குழந்தை பற்றிய கதையில் வரும், அவரது அப்பா, அம்மா உள்ளிட்ட பிற பாத்திரங்கள் அனைத்தும் வெறும் சபலிஸ்ட்டாகவோ, பெரும்வக்கிரம் நிரம்பியவர்களாகவோ படம் முழுக்க சித்தரிக்கப்பட்டிருப்பது பெரும் பலவீனம்.

Post a Comment