பிரபல தொழிலதிபர் ஜான் (முகேஷ்) தனது நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத அளவுக்குக் கஷ்டப்படுகிறார். அதனால், அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கியவர்கள் நெருக்கடி தருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, நிதி ஆலோசகர் தேவநாராயணனை (அர்ஜுன்) அவர் சந்திக்கிறார்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
தேவநாராயணன் தரும் யோசனைகள் பலன் தரும் என்று ஜான் நம்பிக்கை கொள்கிறார். ஆனால், அதற்கடுத்த சில நாட்களில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகிறது. ஏரியொன்றில் அவர் காருடன் குதித்ததாகச் செய்திகள் வருகின்றன.
DOWNLOAD
பின்னர் அந்த நிறுவனத்தை ஜான் மனைவி எலிசபெத் (சோனா நாயர்) நடத்தத் தொடங்குகிறார். தேவநாராயணன் சொல்லும் யோசனைகளைச் செயல்படுத்த, நிறுவனமும் நஷ்டத்தில் இருந்து மீள ஆரம்பிக்கிறது. இந்த நிலையில், ஒருநாள் எலிசபெத் செல்லும் கார் விபத்துக்குள்ளாகிறது.
அதனை நேரில் காண்கிறார் ஒரு ஆட்டோ டிரைவர் (கிரிஷ் நெய்யார்). எலிசபெத்தை காப்பாற்ற முடியாமல் அவர் திணற, ‘கட்சி அலுவலகம் சென்று பாலன் அண்ணனைப் பார்த்து, ஏழுமலை தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்’ என்கிறார்.
அடுத்த நாள் அந்த ஆட்டோ டிரைவரின் தங்கைக்குத் திருமணம். அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாற, ‘நீ பேசாமல் இரு’ என்கிறார் அவரது நண்பர் (தர்மஜன் போல்காட்டி). அடுத்த சில தினங்களில் இறந்தது எலிசபெத் என்று தகவல் தெரிய வருகிறது. கூடவே, அடுத்தடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரது மரணங்கள் ‘அவை கொலையா’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. அதையடுத்து, காவல் துறை விசாரணையைத் தீவிரப்படுத்துகிறது.
இந்த நிலையில், ஜான் – எலிசபெத் மகள் பெர்லியை (நிகில் கல்ரானி) சிலர் கடத்த முயற்சிக்கின்றனர். அவர்களிடம் இருந்து பாலன் (பைஜு சந்தோஷ்) அவரை மீட்கிறார்.
அதன்பிறகு, அந்த ஆட்டோ டிரைவர் பாலனைக் காண்கிறார். அதையடுத்து, பெர்லி இருக்குமிடத்திற்கு அவரை அழைத்துச் செல்கிறார். ஏழுமலை என்ற பெயரை பாலனோ, பெர்லியோ கேள்விப்பட்டதில்லை. ‘அங்கு என்ன இருக்கிறது’ என்ற கேள்விக்கு விடையறிய, அவர்கள் விரும்புகின்றனர்.
இந்த நிலையில், பெர்லியைத் தேடி அந்த இடத்திற்கு போலீஸ் வருகிறது. உடனே அந்த ஆட்டோ டிரைவர் உடன் பெர்லியை ஓரிடத்திற்கு அனுப்பி வைக்கிறார் பாலன். அங்கு செல்கையில், வழியில் சிலர் அவர்களைத் தாக்க வருகின்றனர். அப்போது, அவர்களைத் தேவநாராயணன் காக்கிறார். தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.
அன்றிரவு, வெளியே சென்றுவிட்டு வரும் தேவநாராயணனைக் கொல்ல முயற்சிக்கிறார் பெர்லி. அதனைக் கண்டு அவர் அதிர்கிறார்.
உண்மையில், ஜான் – எலிசபெத் மரணம் எதனால் நிகழ்ந்தது? அதற்குப் பின்னிருப்பவர் யார்? பெர்லி ஏன் தேவநாராயணனைக் கொல்ல முயற்சிக்க வேண்டும்? இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இப்படத்தின் மீதிப்பாதி.
இந்தக் கதைக்கும், ‘விருந்து’ என்ற டைட்டிலுக்கும் என்ன சம்பந்தம்? அதனை கிளைமேக்ஸில் சொல்கிறார் இயக்குனர் கண்ணன் தாமரக்குளம். ஆனால், அந்த கிளைமேக்ஸ் ஆனது, அதுவரை நாம் பார்த்த காட்சிகளுக்குக் கொஞ்சம் கூடச் சம்பந்தமில்லாததாக இருக்கிறது. அது எதிர்பாராதது என்றாலும், நம்மால் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்பதே உண்மை.
Post a Comment