Home » , , » 36 Vayathinile Movie Review

36 Vayathinile Movie Review

நடிகர் சூர்யா தனது 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கும் முதல் படம். புகழின் உச்சியில் இருக்கும்போதே சூர்யாவைத் திருமணம் செய்து கொண்டு சினிமா உலகை விட்டு விட்டுப் போன ஜோதிகா திரும்ப நடிக்க வந்திருக்கும் படம் . மஞ்சு வாரியார் நடிப்பில் மலையாள சினிமா உலகைக் கலக்கிய ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மறு உருவாக்கம் ….

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 

இப்படி பல சிறப்புகளுடன் வந்திருக்கும் படம்தான் ஜோதிகா நடிக்கும் ’36 வயதினிலே ‘
ஆகாஷவாணியில் பணியாற்றும் தமிழ்ச் செல்வனின் (ரகுமான்) மனைவி; ஒரு பள்ளிக்கூட மாணவிக்கு அம்மா ; பாசமுள்ள மாமனார் சதாசிவம் (டெல்லிகணேஷ்) டி வி சீரியல் பைத்தியமான மாமியார் இவர்களுக்கு மருமகள்; வருவாய்த்துறையில் யூ டி கிளார்க்;  இதுதான் வசந்தி தமிழ்ச் செல்வன் (ஜோதிகா) !
கல்லூரிக் காலத்தில் தன்னம்பிக்கை செறிந்த தைரியமான உற்சாகமான பெண்ணாக இருந்த வசந்தி,  திருமணத்துக்கு பிறகு கணவனுக்காக, குடும்பத்துக்காக,  குடும்பத்தின் பொருளாதாரத்துக்காக முற்றிலும் தலைகீழாக மாறுகிறாள். சுயம் இழக்கிறாள். எல்லோரின் பார்வைக்கும் அப்பிராணியாக,  கேலிப் பொருளாக மாறுகிறாள்.வேஸ்ட் பீஸாகத்  தெரிகிறாள் .
அலுவலகத்தில் அவளுக்கு நல்ல தோழி கிரிஜா (தேவதர்ஷினி) , மரியாதையுள்ள சக அலுவலர் ஜெயச்சந்திரன் (பிரேம்) என்று சிலர் இருந்தாலும் வசந்தியை கேலி செய்யவும் அவளை வைத்து ‘கீமடி’ பண்ணவும் ஒரு குழுவே  இருக்கிறது . வீட்டிலோ கணவன் மட்டுமல்ல; மகளும் மதிப்பதில்லை. மகளுக்கு அயர்லாந்து சென்று படிக்க வேண்டும் என்று ஆசை . மகள் கூடவே போக வேண்டும் என்று அப்பா தமிழ்ச் செல்வனுக்கும் ஆசை . ஆனால் வசந்தியை மட்டும் அழைத்துப் போக மனம் இல்லை .
அரசாங்க வேளையில் கிடைக்கும் அவளது  வருமானம் வேண்டும் . அப்பா அம்மாவை பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும் . மிக முக்கியமாக அவள் வேண்டாம் .
கவனக் குறைவாக கார் ஓட்டும் தமிழ்ச செல்வன் ஒரு சிறுவன் மோதி விபத்தாகி விட, கேஸ் என்று ஆனால் அயர்லாந்து போக முடியாது என்பதால் அந்தக் காரை வசந்தி ஓட்டியதாக  மாற்றிச் சொல்ல வைத்து அவளை மாட்ட வைத்து,  தான் தப்புகிறான் . வசந்தியின் ஓட்டுனர் உரிமமும் காலாவதி ஆன நிலையில் வசந்திக்கு எதிராக வழக்கு ஸ்ட்ராங் ஆகிறது.
ஆனாலும் வீட்டில் கணவன் அவளை வார்த்தைகளால் குத்திக் கிழிக்க மகளோ அலட்சியத்தாலும் புறக்கணிப்பாலும் ஒடித்துப் போடுகிறாள் .
இந்த நிலையில் பள்ளி விழாவில் கலந்து கொண்ட குடியரத் தலைவரிடம்,  வசந்தியின் மகள், தன் அம்மா கேட்டதாக ஒரு கேள்வியை கேட்க , அதனால் கவரப்படும் குடியரசுத் தலைவர் அந்தக் கேள்வியை சிந்தித்த வசந்தியை கவுரவிக்கும் வகையில் சந்தித்து,  விருந்து கொடுக்க விரும்புகிறார் . அந்த சந்திப்பின்போது பாதுகாப்புத் தரப்பால் காட்டப்படும் கெடுபிடிகளில் பயந்து குடியரசுத் தலைவர் வந்ததும்,  பிபி ஏறி அவர் முன்னால் மயங்கி விழுகிறாள் வசந்தி .
கணவன் , மகள், தெரு , அலுவலகம் , ஊர் , பேஸ்புக் மூலமாக உலகம்….என்று எல்லோரும் வசந்தியை வைத்து கிண்டல் கும்மி அடிக்கிறார்கள்.
கணவன் மகள் இருவரிடமும் மிச்சம் இருந்த மரியாதையும் போகிறது வசந்திக்கு . இந்த நிலையில் அயர்லாந்துக்கு விசா கிடைக்க, வசந்தியை விட்டு விட்டு தமிழ்ச் செல்வனும் மகளும் மட்டும் அயர்லாந்து போகிறார்கள் . கல்யாணத்துக்குப் பிறகு குடும்பத்துக்காக தனது கனவுகளை இழந்தது எவ்வளவு பெரிய தவறு என்று உணரும் வசந்தி,  நொறுங்கிப் போகிறாள்.
வசந்தியோடு கல்லூரியில் படித்து,  இப்போது ஒரு பன்னாட்டு கம்பெனியில் வருடம் 25 கோடி சம்பளத்தில் பணியாற்றும் சூசன் டேவிட் (அபிராமி ) இந்த சமயத்தில் மீண்டும் வசந்தியை சந்திக்கிறாள் . சூசன்  கொடுத்த உற்சாகத்தால் தனது தனித் தன்மையை கனவுகளை மீட்டெடுக்கும் வசந்தி , எப்படி மீண்டும் குடியரசுத் தலைவரே  தனது மாளிகைக்கு அழைத்து விருந்து கொடுக்கும் அளவுக்கு உயர்கிறாள் என்பதே இந்த 36 வயதினிலே .
Share this article :

Post a Comment